Kumari Palany & Co

Chennai boys kidnapper rounded by Police

Posted on: 03/Nov/2010 3:33:57 AM
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிரானைட் அதிபர் ரமேஷின் மகன் கீர்த்திவாசன்(13) நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து காரில் வீடு திரும்பினான். அப்போது, திடீரென காரில் ஏறிய இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளவிட்டு மாணவனை கடத்திச் சென்றனர். பள்ளி மாணவன் துணிகரமாக கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும், கடத்தல் கும்பலைப் பிடிக்க காவல்துறை களமிறங்கியது. 

இந்நிலையில் நேற்று மாணவன் பத்திரமாக வீடு திரும்பினான். தொடர்ந்து கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்த போலீசார் கடத்தல் கும்பலை சார்ந்த 3 பேர&#ை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களில் ஒருவர் கீர்த்திவாசனின் நெருங்கிய உறவினராவார். 3 பேரும் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு ‌கொண்டு செல்லப்பட்டனர்.